சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என வர்ணனை – jannalmedia.com

சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு ‘இன்குலாப்’ என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது ஒரு முக்கியமான நாள் என்று வர்ணித்த பாகிஸ்தானின் மத்திய திட்ட அமைச்சர் அசத் உமர், பாகிஸ்தானின் இந்த தடுப்பூசி ‘இன்குலாப்’ அதாவது ஒரு புரட்சிக்கு குறைவானது அல்ல என்று கூறினார். தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவிய பாகிஸ்தானின் சுகாதார குழுக்களுக்கும், சீனாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களின் முதல் தேர்வு, சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியான ‘சினோஃபார்ம் ‘ தான், மேற்கில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அல்ல என்றும் அவர் கூறினார்.

“மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது அங்கிருப்பது அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் சினோஃபார்மைக் கேட்கிறார்கள். அது இல்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் திரும்பிச் சென்று விடுகிறார்கள்,” என்று ஆசாத் உமர் குறிப்பிட்டார். ‘எல்லா தடுப்பூசிகளின் பெயர்களும் இருந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் பாகிஸ்தான் முழுவதிலும் மக்களின் முதல் தேர்வு சயனோஃபார்ம் தான் ‘ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆனால் நாங்கள் ‘பாக்வேக்’கையும் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அதை கூட்டாக தயார் செய்துள்ளோம். இது ஒரு புரட்சி,” என்றும் அமைச்சர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் தனது தோழர்களின் உதவியுடன் கடினமான சவால்களை, வாய்ப்புகளாக மாற்ற முயற்சிக்கிறது என்று தேசிய சுகாதார திட்டம் தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஃபைசல் சுல்தான், கூறினார்.

- Advertisment -

Latest