அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் மூளை நோய்: ஹவானா சிண்ட்ரோம்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது.

ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகான காலத்தில், ‘ஹவானா சிண்ட்ரோம்’ எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதிப்பு கியூபாவில் 2016 – 17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இந்த மர்மமான மூளைக் கோளாறு ஏன் உண்டாகிறது என்று தெளிவாகவில்லை. நுண்ணலைகள் நேரடியாகத் தாக்குவதால் இது உண்டாகலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், தங்களுக்கு தலைசுற்றல், நிலைப்படுத்திக் கொள்ள முடியாமை, கேட்கும் திறன் குறைவது, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.

கியூபா தொடர்ந்து சோனிக் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை கியூபா மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

- Advertisment -

Latest