ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை இயான் ஃபிளெமிங் தேர்வு செய்தது ஏன்? – ஹாலிவுட் சினிமா பற்றிய சுவாரசிய வரலாறு

இன்னும் சில நொடிகளில் பேரழிவை ஏற்படுத்தும் நாசகார ஆயுதத்தை வில்லன் பயன்படுத்தப் போகிறார். பல நூறு பேர் உயிரிழக்கப் போகிறார்கள். பல கோடி ரூபாய் பொதுச் சொத்துகள் நாசமாகப் போகின்றன.

ஏதோ இரண்டு உலக நாடுகளுக்கு இடையே சண்டை மூளப் போகிறது. இத்தனை சிக்கல்களையும் தீர்க்கப் போகும் நாயகன் கடைசி நேரத்தில் வந்து சேருகிறார். கொடூரமான முறையில் வில்லனைக் கொன்றுவிட்டு தனது சொந்த நாடான பிரிட்டனையும், உலக அமைதியையும் காப்பாற்றி விடுகிறார். அவர்தான் ஜேம்ஸ்பாண்ட் 007.

திரைப்படங்களில் நாம் இப்படிப் பார்த்த ஜேம்ஸ் பாண்ட், எம்.ஐ. 6 என்ற பிரிட்டனின் ரகசிய உளவு அமைப்பில் பணியாற்றும் அதிகாரி. துப்பாக்கிகள், கார்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவை பற்றிய நுட்பமான அறிவும் வியத்தகு உடல் வலிமையும் கொண்டவர். துப்பறிவதில் நிபுணர். சாகசங்களை பெரிதும் விரும்புவர். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். கடந்த நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கிவரும் இந்தக் கற்பனை மனிதர் உலக சாகசக்காரர்களின் பிம்பமாகவே பார்க்கப்படுகிறார்.

இத்தகைய பிரபலமான கதாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். ஃபிளெமிங்கின் கற்பனைப்படி ஜேம்ஸ் பாண்ட் என்பவர் முழுச் சோம்பேறியான, எதிலும் ஆர்வங்காட்டாத மனிதர். சுற்றி என்ன நடந்தாலும் அவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல் தம் விருப்பப்படி நடந்து கொள்பவர். போர்களில் பங்கேற்றபோது தாம் நேரில் கண்ட உளவாளிகளின் கலவையாகவே ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஃபிளெமிங் படைத்தார்.

ஜேம்ஸ் பாண்ட் எப்படியிருக்க வேண்டும் என்று கேட்டால் ஹோகி கார்மிக்கேல் என்ற அமெரிக்கப் பாடகரை அடையாளமாகக் காட்டுவார் ஃபிளெமிங். பார்ப்பதற்கு பிளெம்மிங்கைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர் இவர். இதன் மூலம் பிளெமிங், ஜேம்ஸ் பாண்டாக தம்மையை உருவகப்படுத்திக் கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

- Advertisment -

Latest